முகநூல் அன்பர்களின் கருத்துமழை
தங்களது முயற்சி தமிழர்களைத் தெளிவாக்கும்
.
-கலைமுகிலன்
மு.திருவேங்கடம் ஐயா மிக்க நன்றி. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். இதனை அனைவருக்கும் பகிர்ந்து கடைபிடித்தால் நன்று
-சுப்ரமணியம்
கோவிந்தசாமி
நல்ல தமிழ்ப்பெயர் தந்து தமிழுணர்வை ஊட்டிய
பெற்றோர்களுக்கு நன்றி. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
-முகிலன் முருகன்
மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா! நன்றி
-விண்மலர் கருணாகரன்
தமிழ் மணம் கமழ்கிறது
இரமணி தர்மன்
மிக்க நன்றி
ஐயா.
கனிமொழி சந்திரசேகரன்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...
முகிலன் கோவிந்தராஜூ
இந்தப் பெருமை எல்லாம் பெற்றோரையே சேரும்.
சுகந்தா பிரபாகரன்
உண்மைதான் ஐயா...எந்த வடநாட்டானும் தன் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவது இல்லை. ஆனால், மதிகெட்ட தமிழன் மட்டும்தான் இன்னும் ஆரியனுக்கு அடிமைகளாய் இருக்கிறோம்.
இரமணி தர்மன்
தனித்தமிழ்ப்பெயர்கள் ,வடமொழிப்பெயர்களும்
அவற்றிற்கான பொருளும் கொண்ட நூலை வெளியாக்கினால் தமிழ் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக
இருக்கும். மிக்க நன்றி.
ஏ.ஏஸ். இலட்சுமணன்
ஆரியமொழி பெயர்களைத் தமிழ்ப்படுத்தும் போது மிகக் கேவலமாக உள்ளது.
இரமணி தர்மன்
நன்றி..
அல்லிமலை ஆனந்தன்
இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது போல் ஆரிய மொழிப் பெயர்களின் பொருளினைத் தொகுத்துக் கொடுத்தால் மிக்கப் பயனாக இருக்கும். நன்றி
எழிலன் எழிலன்
அடியேனும் பல தடைகளை மீறிக் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்தான் வைத்தேன்..சால்பினியன்...சால்பு + இனியன்..ஆதலால் பேருவகை அடைகின்றேன்
குமார் துரைராஜூ
நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டுகின்ற, சூட்டிய, சூட்டப்போகும் அனைத்துத்
தமிழன்பர்களுக்கும் எம்முடைய வாழ்த்துகள். பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் நூற்றுக்கணக்காருக்கு
நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டியவர் என் தந்தையார் அமரர் சி.செ.மருதைவிரனார்.எங்கள்
குடும்பத்து உடன்பிறப்புகளின் பெயர்களைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
மன்னர் மன்னன், தமிழரசி, கதிரவன், மதிவாணன், கலைச்செல்வன், அமுதவள்ளி, திரவியம், அண்ணாதுரை,
நெடுஞ்செழியன், வாசுகி,இளந்தமிழ். உடன்பிறப்பு/என் பிள்ளைகள் : தீபமலர், இளவரசன், மலர்செல்வி,
சிவநேசன், முத்தமிழ்ச்செல்வி,நந்தன், யாழினி, கனிமொழி, தமிழ்வேலன், கோகுலன், நளன்,
செல்வன், திருமலர், திருமகள், கலைமகள்,எழில்மதி, கோவரசன், பனிமலர்,பூவரசி, தமிழ்ச்செல்வன்....
மன்னர் மன்னன் மருதை
நன்றி ஐயா.
இளமாறன் இராமமூர்த்தி
பயனுள்ள தகவல்.
வெங்காடேசன் சேகர்.
நன்று. அருமை.
மு.தனலெட்சுமி
இவை மாதிரி பெயர்பட்டியல் போட்டு செந்தமிழில்
பெயர் வைப்பதற்கான வற்புறுத்தலுக்கு ஆளாகிவிட்டது இன்றைய தமிழின் நிலைமையும் தமிழர்களின்
நிலைமையும்". "வளர்ந்து வரும் நாகரீகத்திற்கு ஏற்ப வளைந்து கொடுக்க முடிந்த
தமிழர்களால், தமிழுக்காக வளைந்து கொடுக்க முடியாமல் போனது தமிழ் மொழியின் துரதிஷ்டம்!
மூர்த்தி ஜே.பி.மூர்த்தி
மேலும் பெயர்களச் சேர்க்கவும்.
இரவின் இரவி
மிக்க அருமை
பி.ஏ.ஜானகி
மிகமிக அழகு , அருமை. நன்றி
நாகேஸ்வரி நாராயணசாமி
தென்னரசு பத்மன்