செந்தமிழில் பெயரிடுவோம்: முகப்புப்பக்கம்

செந்தமிழில் பெயரிடுவோம்

குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்

ஆண் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்
http://kuttivall.blogspot.com/2008/06/blog-post.html

அ' வரிசை
அகத்தியன்
அகவேந்தன்
அகிலன்
அசோகன்
அடலேறு
அண்ணல்
அமரன்
அமர சிம்மன்
அமர வர்மன்
அமர வீரன்
அமர வேந்தன்
அமலன்
அமிர்தரசன்
அமுதன்
அமுதரசன்
அமுத வாணன்
அதியமான்
அய்யன்
அரசன்
அரசிளங்குமரன்
அருள் மொழி வர்மன்
அழகன்
அழகரசன்
அழகரசு
அவனி சேகரன்
அவனி சூளாமணி
அறவாணன்
அறிவரசன்
அறிவரசு
அறிவுமதி
அறிவுநிதி
அறிவொளி
அன்பன்
அன்பரசன்
அன்பரசு
அன்பழகன்
அன்புச்செல்வன்
ஆகவ மல்லன்
ஆகாய சிம்மன்
ஆகாய வேந்தன்
ஆடவல்லான்
ஆடலரசன்
ஆதவன்
ஆதித்தன்
ஆதித்த சோழன்
ஆதித்த கரிகாலன்

'இ' வரிசை

இசையரசன்
இசை வேந்தன்
இமயன்
இமயவர்மன்
இமயவரம்பன்
இமய வீரன்
இதயன்
இதய சிம்மன்
இதய வர்மன்
இதய வேந்தன்
இலக்கியன்
இலக்கிய வேந்தன்
இளங்காளை
இளங்கோ
இளங்கோவன்
இளம்பரிதி
இளமாறன்
இளமணிமாறன்
இளவழகன்
இளவரசன்
இளவரசு
இன்பன்
இன்ப வாணன்
இன்ப சேகரன்
இனியன்
இனியவன்

'ஈ' வரிசை

ஈகை அரசு
ஈகை மார்பன்
ஈகை மாறன்
ஈழ வேந்தன்

'உ' வரிசை

உத்தமன்
உதயன்
உதயகுமாரன்
உதய சிம்மன்
உதய சூரியன்
உதய வர்மன்
உதய வேந்தன்
உளமாறன்

'ஊ' வரிசை

ஊரன் அடிகள்
ஊர்க்காவலன்
ஊசிமாறன்
ஊடல் மாறன்
ஊடல் வேந்தன்
ஊடலழகன்

'எ' வரிசை

எழில்
எழில் அரசன்
எழில் வர்மன்
எழில் வேந்தன்
எழில் மார்பன்
எழில் வீரன்
எழிலன்

'ஏ' வரிசை

ஏழிசை மார்பன்
ஏழிசை வேந்தன்
ஏழிசையரசன்
ஏழிசையரசு

'ஐ' வரிசை

ஐயன்
ஐந்திணை மார்பன்
ஐந்திணை வேந்தன்

'ஒ' வரிசை

ஒளியன்
ஒளி மாறன்
ஒளி வேந்தன்
ஒட்டக் கூத்தன்

'ஓ' வரிசை

ஓரி
ஓசை மார்பன்

'ஔ' வரிசை

ஔவை மகன்
ஔவை நாடன்

'க' வரிசை

கதிர் அழகன்
கதிர் வண்ணன்
கதிரவன்
கடல் மன்னன்
கடலரசன்
கடல் வேந்தன்
கடுங்கோன்
கணைக்கால் இரும்பொறை
கபிலன்
கரிகாலன்
கரிகால சோழன்
கவிஞன்
கவிச்சூரியன்
கவிமணி
கவிமாறன்
கவிபாரதி
கவிவேந்தன்
கன்னலமுதன்
கனல் அரசன்
கனல் வேந்தன்
கார்முகிலன்
கார்மேகம்
காளமேகம்
குணவேந்தன்
குணசிம்மன்
குணசீலன்
குணாளன்
குலசேகரன்
குலசேகர பாண்டியன்

'ச' வரிசை

சந்திரன்
சந்தன பாண்டியன்
சந்தன மார்பன்
சந்திர வர்மன்
சந்திர பாண்டியன்
சுந்தரன்
சுந்தர பாண்டியன்
சுதந்திரன்
சூரியன்
சூரிய சிம்மன்
சூரிய வர்மன்
செங்குட்டுவன்
செங்கோடன்
செந்தமிழ்
செந்தமிழ் மாறன்
செந்தமிழ் பாண்டியன்
செந்தமிழ் வீரன்
செந்தமிழ் வேந்தன்
செந்தமிழன்
செந்தமிழோன்
செந்நாப் புலவன்
சேரன்
சேர வேந்தன்
சேரமான்
சேர சோழன்
சேரன் கணைக்கால் இரும்பொறை

'ஞ' வரிசை

ஞாலன்
ஞால வேந்தன்
ஞாயிறு

'த' வரிசை

தமிழ்
தமிழ் அழகன்
தமிழ் மன்னன்
தமிழ் மாறன்
தமிழ் வாணன்
தமிழண்ணல்
தமிழரசன்
தமிழரசு
தமிழாசான்
தகடூரான்
தகழி வேந்தன்
தகை வேந்தன்
தயாநிதி
தில்லை மாறன்
தில்லையாளன்
தில்லையரசன்
திருமார்பன்
திருநாவுக்கரசன்

'ப' வரிசை
பரணன்
பரிதி
பழமலை
பன்னீர் செல்வம்
பாணன்
பாரதி
பாரி
பாவாணன்
பாவிசைக்கோ
பாவேந்தன்
பிறை சூடி
புகழேந்தி
புரட்சி மணி
பூங்கண்ணன்
பூங்குன்றன்
பூவண்ணன்
பெரியண்ணன்
பெருவழுதி
பேகன்
பொய்யா மொழி
பொருநன்
பொழிலன்
பொன்மணி
பொன்முடி
பொன்னையன்
பொன்னன்

Pure Tamil Baby Names for Boys




Sangam Tamil Names for boys – list compiled by Tamil professor Dr. Rukmani and Vaidehi.   Please note that Thiru is not Tamil. It is the Sanskrit Shri adapted to Tamil.  The names in this list are from our ancient Sangam Tamil texts and also from the Dravidian Etymological Dictionary by Tamil scholars Burrow and Emeneau.
Most of these names are from Sangam Tamil words – Many ancient Tamil words have more than one meaning. Most Tamils don’t have Tamil names because of our different religions.
It should be a matter of pride to have a Tamil name. Here are some ancient words. There are many names here which are modern and have ancient roots.
Please go to www.learnsangamtamil.com, and see Sangam Tamil poems with easy urai in Tamil and English.  Browse and see whether you find any words that can be used as names.
None of the Akam poems (over 75%  of Sangam literature is Akam) in Sangam have any names. That’s the convention. They cannot have names in the poems. The poets wanted those who read them to believe that they are part of the poem. Names of poets in Sangam literature are usually poetical names with the names of their towns, descriptive of their professions etc.  In Puram, we have the king’s names, which are again very long because of the descriptive adjectives before and after the original name. This (in the manner that I have listed) is the closest with can get with using these ancient words as names. If you analyze other language names, they are also just ‘words’ with mundane meanings in that language – which eventually become accepted names.
I hope everybody who comes here can find a good name in this site.   Has anybody heard of the beautiful name ‘செழியன்’ being given to baby boys in northern India?  Why are we attracted to north Indian names when we have beautiful Tamil words?
My friend Dr. Rukmani has done a fabulous, 192 page Kolam book.  Every Tamil women will be proud to own a copy.  If interested, please contact her at kondraipublications@gmail.com.  Also, it is available at the Connemara Library complex, along with other Sangam books written by  me – Vaidehi Herbert.  It is a large book – 11 inches by 8.5 inches.  
WRAPPER-KOLAM_FINAL
அகவன் – Akavan – singer
அண்டிரன் – Andiran (one of the 7 great vallals – was known as ஆய்)
அதிகன் – Athikan – Sangam Tamil Name
அதியன் – Athiyan – Sangam Tamil name
அதியமான் – Athiyaman
அந்துவன் – Anthuvan
அமர் – Amar – the word means tranquil, desire, strife
அமல்  – Amal – means செழிப்பு, fullness (occurs many times in Sangam poems)
அருமன் – Aruman – A leader mentioned in a Natrinai poem
அருள் – Arul
அருள்மொழி – Arulmozhi
அவியன் – Aviyan, name of a small region king
அழகன் – Azhakan
அழிசி – Azhisi
அன்பன் – Anpan
அன்பு – Anbu
அன்னி, Anni – A small-region king in Natrinai
ஆதன் – Athan (name for Chera kings, occurs in Ainkurunuru)
இனியன் – Iniyan
இருங்கோ – Irungo
இளஞ்சென்னி – Ilanchenni
இளன் – Ilan (young, youth)
இளங்கீரன் – Ilankeeran
இளங்கோ – Ilango
இளங்கோவன் – Ilangovan
இளம்பிறை – Ilampirai
இளம்வழுதி – Ilamvazhuthi
இளமாறன் – Ilamaran
உசிதன் – Usithan (name for king Pandiyan Nedumaran – உசி means கூர்மை, sharp, smart)
உதியன் – Uthiyan (name of a king)
எவ்வி – Evvi, A small region king who was very charitable
ஓரி – Ori
கடலன் – Kadalan (Kadalanār is the name of a Sangam poet)
கதிரவன் – Kathiravan
கதிர் – Kathir
கதிர்ச்செல்வன் – Kathirselvan
கபிலன் – Kapilan
கந்தன் – Kanthan
கயிலன் – Kayilan – comes from the word கயில், which means perfection – occurs only twice in Sangam literature. Ainkurunuru 62, and Paripadal 12
கலின் – Kalin – comes from கலி which means flourishing
கவின் – Kavin
கனி – Kani
காரி – Kari
கிள்ளிவளவன் – Killivalavan
கீரன் – Keeran
கோடன் – Kodan
கோமான் – Koman
சாரல் – Saaral
சால் – Saal  (நிறைவு)
சால்பு – Salbu (wisdom)
சாலன் – Saalan (comes from the word சால் which means நிறைவு)
சுகிர் – Sukir (to polish)
செங்குட்டுவன் – Senguttuvan
சேந்தன் – Senthan (son of Azhisi, a small region king)
சென்னி – Senni
செந்தில் – Senthil
செம்பியன் – Chempiyan
செம்மல் – Chemmal – பண்பு, culture, தலைமை, leadership
செழியன் – Chezhian
செல்வன் – Selvan
சேந்தன் – Chenthan
சேரன் – Cheran
சேரமான் – Cheraman
சோழன் – Chozhan
கோமான் – Koman
தமிழன் – Thamizhan
தமிழ்செல்வன் – Tamilselvan
தித்தன் – Thithan
திரையன் – Thiraiyan
தென்னன் – Thennan (meaning தென்னவன், which is used in Sangam poetry while referring Pandiyan kings)
நன்னன் – Nannan (small region king)
நிகண்டன் – Nikandan (name of a Sangam poet)
நிகரன் – Nikaran
பேகன் – Pehan
நக்கீரன் – Nakeeran
நவிர் – Navir – top, peak
நவின் – Navin – to learn, to desire
நளின் – Nalin – comes from the நளி which means close, abundance, pride
நள்ளி- Nalli – A small region king
நன்னன் – Nannan – A small region king
நவில் – Navil – to desire, be abundant, to sound, to learn
நிகரன் – Nikaran – comes from the word நிகர் which means ஒளி, சிறப்பு, resemble, fame, etc.
நிமிரன் – Nimiran
நிவன் – Nivan (உயர்ந்த)
நெதி – Nethi – Wealth (rare word, Natrinai 16)
பகலோன் – Pakalon. கதிரவன், sun – this is a precious word used only once in the entire Sangam literature -in Akananuru 201
பதுமன் – Pathuman (Two poets who wrote in Kurunthokai have this name)
பண்ணன் – Pannan – A small region king
பாண்டியன் – Pandiyan
பாணன் – Panan – bard, also name of a small region king
பரணன் – Paranan
பரிதி – Paruthi, கதிரவன், sun
பாரி – Pari
பிட்டன் – Pittan – A small region king
புகழ் – Pukazh
புகழன் – Pukazhan
பெருங்கோ – Perunko
போத்தன் – Pothan (Sangam poet Pothanār)
மகிழ்நன் – Makizhnan
மதன் – Mathan – means வலிமை, strength
மதியன் – Mathiyan
மணி – Mani
மன்னன் – Mannan
மள்ளன் – Mallan
மாறன் – Maran
முரளி – Murali – it is a ancient Tamil word which went into Sanskrit
மூரியன் – Mooriyan, comes from மூரி – Pride, strength
நன்னன் – Nannan
நம்பி – Nampi
நவிரன் – Naviran, from the root word நவிர் which means top
நவிர் – Navir, means top
நலங்கிள்ளி – Nalankilli
நவில் – Navil means declare, utter, sing
நவிலன் – Navilan
நிகரன் – Nikaran – comes from the word நிகர் which means ஒளி (Kurunthokai 311)
நெடுஞ்செழியன் – Nedunchezhian
நெடுமாறன் – Nedumaran
மகிழ்நன் – Makizhnan
மாயோன் – Mayon
முகில் – Mukil
முகிலன் – Mukilan
முருகன் – Murukan
மூவன் – Moovan
வல்லவன் – Vallavan
வழுதி – Vazhuthi
வளர்பிறை – Valarpirai
வளவன் – Valavan
வள்ளுவன் – Valluvan
வாணன் – Vanan
வியன் – Viyan (பெரிய)
வீயன் – Veeyan (செல்வன்)
வினயன் – Vinayan (from வினை meaning work)
வேந்தன் – Venthan

Pure Tamil Baby Names for Girls

http://puretamilbabynames.wordpress.com/


இனிய தமிழ்ப்பெயர்கள்

இனிய தமிழ்ப்பெயர்கள்
http://www.prohithar.in/babynames/Tamizan_Male_baby_names.pdf

http://www.prohithar.in/babynames/lakshmi_tamil_male_baby_names.pdf








நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்!

நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்! அவனொரு தமிழன் என்றே அடையாளம் காட்டுங்கள்! 

திருமகள்

http://maavirarmann.com/news-newsid-22253.html

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் திருநாள், வள்ளுவர் பிறந்த நாள் விழாவின் போது தூய தமிழ்ப் பெயருடைய குழந்தைகளுக்கு 1,500 வெள்ளி பரிசாக அளித்து வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் கிடைக்கும் போது குடவோலை மூலம் பரிசாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
இந்த ஆண்டு (தி.ஆ.2043) நடத்தப்பட்ட போட்டிக்கு 68 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. அதில் 28 பெயர்களே தனித்தமிழ் வரைவிலக்கணத்துக்கு அமைய இருந்தன. எஞ்சிய பெயர்கள் வட மொழிப் பெயர்களாகவோ அல்லது பெயரில் பொருளோ, இனிமையோ இல்லாமல் இருந்தன. அந்தப் பெயர்களில் சில பின்வருமாறு.
அரிணி, ஓவியா, தாமிரன், கவிநயா, ஆரன், தணிகா, சுஜேன், அவனி, மிதுசா, மாதினி, காவியா, காவியன், தாரகன், அகரன், கவிநயன், கார்த்திபன், கவின், சங்கவி, நிவேதினி, அகிலன், ஈசன், ஆரன், புகழாளன், மாதினி, காவியா, தாரகன், கார்த்திபன், சிறிலக்ஸ்மனா, மாதுனம, அஞ்சலி, ஒவியா, செல்வாகினி, ஒளிமயன், ஆரபி, நர்த்தகி, கார்த்திகன், கங்கா, தாமிரன், கவீஸ், அரினி.
இந்தக் காலத்தில் பெரும்பான்மைத் தமிழ்ப் பெற்றோர் கிரந்த எழுத்துக்களான ஷ், ஸ், ஜ, ஹ, ஸ்ரீ இடம்பெறும் பெயர்களை விரும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். காரணம் அதனைப் புதினம் அல்லது நாகரிகம் என நினைக்கிறார்கள். பல பெற்றோர்களுக்கு வட மொழிப் பெயர் எது தமிழ் மொழிப் பெயர் எது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால வடமொழிப் பெயர்களை தமிழ்ப் பெயர்கள் எனக் கருதி வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து விடுகிறார்கள்.
கஜன், டிலஷ்சனா, டிலக்க்ஷன், சாதனா, ரதிஷா, ஷாரா, ஷிரோமி, யூரேனியா, ஜெனாத், தர்ஷா, ஜசோன், ஆசா, கோசா, வவியன், லட்சிகா, நிருஜா, நிருபிகா, அபிஷா, சுஜுதா, ஜீவிதன், நிரோஜன், நிரோஜி, சுரேஷ், சுரேஷி, வர்ஷன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.
வடமொழியாளர் (சமற்கிருதம்) உயிரை அச்சு, சுரம் எனவும் மெய்யை அல், வியஞ்சனம் எனவும் கூறுவர். ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது எழுத்தாலாகி விகாரமின்றித் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்சமம் எனப்படும். அமலம், கமலம், காரணம், குங்குமம் பொது எழுத்தாலாகிய தற்சம மொழி.
ஆரியத்திற்கே உரிய சிறப்பு எழுத்தாலும் பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகித் திரிதல் முதலிய விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்பவம் எனப்படும். சுகி, போகி, சுத்தி. இவை சிறப்பெழுத்தாலாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் தற்பவ மொழி.
அரன், செபம், ஞானம், அரி. இவை பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் தற்பவ மொழி. ஹரன் அரன் ஆகவும் ஜெபம் செபம் ஆகவும் ஞான் ஞானம் ஆகவும் தமிழில் வரும். (நன்னூல் - நல்லூர் ஆறுமுகநாவலர் உரை)
ஞானம் என்ற வடசொல்லுக்கு தமிழில் நேரடியான பொருள் அறிவு, ஞானி என்றால் அறிவாளி, வடமொழி தேவபாடை என்று கற்பிக்கப் படுவதால் ஞானம் என்ற சொல் மிகச் சிறந்த பொருளைத் தருவதாகத் தமிழ்மக்கள் நினைக்கிறார்கள். ஞானிகள் சொன்னார்கள், எழுதினார்கள் என்று எழுதப்பட்டதை படிக்கும் போது அதில் மிகப் பெரிய தத்துவம், புனிதம் பொதிந்திருப்பதாக தமிழர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதையே அறிவாளிகள் சொன்னார்கள், எழுதினார்கள் என்று படித்தால் ஏதோ படித்தவர், சிந்தனை செய்பவர் எழுதி இருக்கிறார் என்ற பொருள் தருவது போல் தோன்றும். உண்மையிலேயே ஞானி என்றாலும் அறிவாளி என்றாலும் ஒரே பொருள் தான். ஆனால் தமிழர்கள் தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்கள் குழந்தைகளுக்கு அறிவாளி என்றோ, பேரறிவாளன் என்றோ பெயர் வைக்கப் பின்நிற்கிறார்கள்.
இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொருள் மயக்கம் காரணமாக கமலம், அரன், ஞானம், அரி எனப் பெயர் வைக்கிறார்கள். அவை வடமொழிப்பெயர்களாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்திய தூய தமிழ்ப் பெயர் போட்டியில் வெற்றி பெற்ற தூயதமிழ்ப் பெயர்கள் கனிமொழி, எல்லாளன், தமிழ், அகரன், தமிழினி, கரிகாலன், திருமகள், முகிலன், இனியவன் மற்றும் சேயோன். தூய தமிழ்ப் பெயர்களாக இருந்தும் பரிசு பெறத் தவறிய பெயர்கள் செங்கோன், தமிழ்ச்செல்வன், ஆரூரன், தாமரை, புகழாளன், ஈழன், தாயகன், இனியவன், போன்ற பெயர்கள்.
நாகரிகம் அடைந்த காலம் தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர்.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தே எனத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். தமிழில் பேரளவானவை காரணப் பெயர்களே. பிற்காலத்தில் காரணம் தெரியாத சொற்கள் இடுகுறிப் பெயர்கள் என அழைக்கப்பட்டன.
அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ்ப் பெண்ணைப் போல இருக்கிறதே என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம்.
நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள், இவையாவும் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும். முக்கியமாகப் பெயர்கள் தமிழர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் குறியீடுகள்.
தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. சங்க காலத்தில் பெயர்கள் தூய தமிழில் இருந்தன. பின்னர் வடமொழி ஆதிக்கத்தின் காரணமாக மன்னர்கள், புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன ஆரியமயப் படுத்தப் பட்டன.
கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர் மகேந்திரவர்மன், இராஜவர்மன், இராசராசன், குலோதுங்கன், வரகுணபாண்டியன் என வடமொழிப் பெயர்கள் ஆகின.
முதுகுன்றம் - விருத்தாசலம் ஆனது. மரைக்காடு - வேதாரணியம் ஆனது. மாமல்லபுரம் மாபலிபுரம் ஆனது. மயிலாடுதுறை என்ற அழகான பெயர் மாயூரம் ஆனது. கீரிமலை நகுலேஸ்வரம் ஆனது.
சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், பாவலரேறு புலவர் பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் தொடக்கிய தனித் தமிழ் இயக்கம் காரணமாக வடமொழிப் பெயர்களை நீக்கித் தனித் தமிழில் பெயர்கள் வைக்கும் பழக்கம் செல்வாக்குப் பெற்றது. குழந்தைகளது பெயர்கள் மட்டும் அல்லாது வயது வந்தவர்களுடைய வடமொழிப் பெயர்களும் தமிழாக்கப்பட்டன.
சுவாமி வேதாசலம் அவர்கள் மறைமலை அடிகள் (சுவாமி - அடிகள், வேதம் - மறை, அசலம் - மலை) எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் (சூரியன் - பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி - கலைஞர்) எனவும் நாராயணசாமி நெடுஞ்செழியன் எனவும் கிருஷ்ணன் நெடுமாறன் எனவும் சாத்தையா தமிழ்க்குடிமகன் எனவும் இராமையா அன்பழகன் எனவும் சோமசுந்தரம் மதியழகன் எனவும் தங்கள் பெயர்களைச் சங்க காலப் புலவர்கள் மன்னர்கள் பெயர்போன்று மாற்றிக் கொண்டனர்.
ஈராண்டுகளுக்கு முன்னர் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களது வடமொழிப் பெயர்களை நீக்கிவிட்டுத் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தனது தந்தை இராமசாமியின் பெயரைத் தொல்காப்பியன் என மாற்றினார்.
அண்மைக் காலம்வரை திருமண அழைப்பிதழ்களில் விவாகம், சுப முகூர்த்தம், பத்திரிகை, ஸ்ரீ, வருஷம், மாஸம், தேதி, சிரஞ்சீவி, சௌபாக்கியவதி, கனிஷ்ட, சிரேஷ்ட, நிச்சயம், இஷ்டமித்திர, பந்து, ஜன சமேதராக விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்து ஏகுமாறு பிரார்த்திக்கின்றேன் என்றுதான் எழுதப்பட்டது.
தனித்தமிழ் இயக்கம் காரணமாக இன்று திருமணம், நல்வேளை, அழைப்பிதழ், ஆண்டு, திங்கள், நாள், திருநிறைச் செல்வன், திருநிறைச் செல்வி, தலைமகன், தலைமகள், உற்றார் உறவினர், வந்திருந்து, மணமக்களை வாழ்த்தியருளும்படி வேண்டுகிறோம் என மாற்றப்பட்டு விட்டது.
தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவர் தமிழனாகி விடமுடியாது. தமிழ்நாட்டில் பிறப்பதால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது. தமிழ் வாழையடிவாழையாக (Heritage) வருவதனால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது.தமிழ் மீது பற்றுதல் வேண்டும். தமிழ் மீது தாகம் வேண்டும். அவ்வாறு இருப்பவனே தமிழன்.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் அல்லாத பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. தலைவர்கள், புகழ் பெற்றவர்கள், குடும்பத்தின் முன்னோர்கள் பெயர் சூட்டும் வழக்கமும் அருகி வருகிறது. பேரன், பேத்தி என்று சொல்லே பெயரன் (தாத்தாவின் பெயரைக் கொண்டவன்), பெயர்த்தி என்பதால் வந்தது தானே!
தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு விழுக்காடுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.
அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவது காண்க.
(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.
(2) தூஷிகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷித்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷிகை, தூஷத்தல், தூஷணம் ஆகிய சொற்கள் வழியாகவே தூஷிகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.
(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக் கொள்ளலாம். பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.
(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிஷன், மகிஷா என்ற பெயர்கள் ஆகும். மகிஷம் என்பது எருமை எனப் பொருள்படும்.
(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.
தமிழர்களது பெயர் அவர்களது தேசிய அடையாளத்தின் குறியீடாகும். தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு வடமொழிப் பெயர்களை வைப்பது தமிழர் பண்பாட்டைச் சீரழிப்பதாகும். தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாகும். தன்மானத்தையும் இனமானத்தையும் இழப்பதாகும்.
தமிழர்கள் தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகிகிறார்கள். அவர்களுக்குத் தமிழின் தொன்மை, வண்மை, இளமை இனிமை, நீர்மை தெரிவதில்லை. தமிழ் எது வடமொழி எது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. தற்காலத் தமிழர்கள் பஞ்சாங்கம், சோதிடம், எண் சாத்திரம் பார்த்து பல்வேறு மொழிகளில் பொருள் இல்லாமலோ, தெரியாமலோ பெயரிட்டு விடுகின்றனர். இன்ன எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று சொல்லும் சோதிடர்கள், எண் சோதிடர்கள் மேல் மக்களுக்கு கூடி வரும் நம்பிக்கைக்கு இதற்குக் காரணம் ஆகும். இன்னும் சிலருக்குத் தங்கள் பெயர்களில் கிரந்த ஒலிகள் வரவேண்டும் என்ற தீராத மயக்கம் இருக்கிறது.
தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. ட, ண, ற, ண, ன, ர, ல, ழ, ள என்ற வரிசை எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை இலக்கண விதியை அறியாதவராய் இந்த எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள்.
தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா, திருமகள், கலைமகள், பூமகள், தமிழ்ச்செல்வி, கோதை, பூங்கோதை, மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன் போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன.
தமிழ் இலக்கணப் படி ஆண்களின் பெயர்கள் "அன்" "அர்" விகுதியிலோ, �அம்� விகுதியிலோ முடிய வேண்டும். எடுத்துக்காட்டு கம்பன், வள்ளுவன், இளங்கோவன், திருமாவளவன், தொல்காப்பியன். பெண்களின் பெயர்கள் "இ" விகுதியிலோ, "ஐ" "அள்" விகுதியிலோ முடிய வேண்டும். எடுத்துக்காட்டு கண்ணகி, வாணி, குந்தவை, கோதை, கலைமகள், திருமகள், நாமகள். அப்படி முடிந்தால் சந்த இனிமை மிகும். அதேபோல முடிந்த மட்டும் பெயர்களில் வல்லின எழுத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம்தான் இப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் முக்காலே மூன்று விழுக்காடு வடமொழிப் பெயர்களையே வைத்துத் தொலைக்கிறார்கள்.
05.12.2008 தினமலர் கோவை பதிப்பில் பிறந்த நாள் வாழ்த்துப் பெற்ற குழந்தைகள் பெயர்கள்:
ஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார், கார்த்திகா, விஜயபாரதி, தருண், நவீன், ஹிரன்விகாஷ், சர்வேஸ்,ஸ்ரீஇமி, கார்த்திகா, நித்திலன், ரித்விக், மதன், கவுதம், வினுதர்ஷினி, முகிலா, பரத்ராம், சுமையா, பிரநீஷ், பிரகாஷ், ரஞ்சித், அமிர்வர்சினி, ரணீட்டா, உமயாள்தர்சினி, அகிலேஷ், சுவேதா, வசுந்தரா, சுபஸ்ரீ, கீர்த்தனா, ரித்திக், யோகேஸ்வரி, விகாஸ், கவின், முஹமதுஷைத், தனகவுரி, கார்த்திகாதேவி, பிரணதி, தனுஷா, அக்ஷயா, அனுகிரஹா, கீர்த்திவாசன், சுஜேஸ் கார்த்திக், பிரனேஷ், ருத்ரேஷ்பாரதி, அப்ரீன், ஹேமா, மிருதுளா, ரக்ஷனா, அனுஷ், நித்யாஸ்ரீ, ஹரிஷ், திரிஷிதா, சுருதி, நிகிதாஸ்ரீ, அகிலேஷ், சுஜன், சத்தியநாராயணன், ரிதிகா, பிரக்னா, சாமுவேல்ராஜ், சிவவிஷ்வா, ஸ்ரீஹரிணி, வைஷ்ணவி, ஸ்ரீராம், ரித்திகா, இலக்கியா, முத்துவிஷால், அருண் ஆதித்யா, விக்வின், சந்தியா, சிவராஜ், கிரண்குமார், லாவண்யா, தர்ஷினிஸ்ரீ, பர்ஷன்பானு, திவ்யா, சூர்யபிரகாஷ், கோகுல்பிரசாத், அனு, ஹரிசுதன், ஹர்ஷவர்தன், சிபு, காயத்ரி, ஓம், இந்துபிரியா, சுபஹரிணி, ரோஹித், ஸ்ரீநிதிவருணா, மணிகண்டன், பரத், சங்கமித்திரை, நேத்ரா, பாலகிருத்திக், சஞ்ஜெய் பிரணவ், அவ்வீஸ், ஹர்ஷினி, யுவநிதர்ஷனா, சிவசங்கர், ரதேஷா, ஹரினிசூர்யா, ஷியாம், பர்ஜானா, கிருஷ்ணன், பில்ஜோபினோய், தேன்மலர், பிரியதர்ஷினி, ஹரிசுதன், ஹையகிரிவி, நேத்ரா, மானஷா, கேத்ரின் சஹானா, தீபன்ஸ்ரீ, விக்னேஷ், அப்ரோஸ், தனுஷ்ராகவ், ரோஸ்மால், ஆதிஷ், ஸ்ரீஜித்குமார், ஆதிஷ், கிறிஸ் ரையன்.
இதில் தேன்மலர் என்ற ஒரு பெயர்தான் தூய தமிழ்ப்பெயர். கார்த்திகா, கார்த்திக், மணிகண்டன், கவின் ஆகிய நான்கும் தமிழாக இருக்குமோ என்று தோன்றுபவை. ஏனையவை தமிழ் இல்லை என்று உறுதியாகத் தெரியும் வடமொழிப் பெயர்கள். தினமலர் பார்ப்பனர்களால் நடத்தப்படும் நாளேடு என்பதால் அதில் பிறந்த நாள் வாழ்த்துக்கு வந்த பெயர்களில் 98 விழுக்காடு வடமொழிப் பெயர்களாக இருப்பதில் வியப்பில்லை.
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. (இலக்குவனார் திருவள்ளுவன்)
எனவே நல்ல தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் அவனொரு தமிழன் என்றே அடையாளம் காட்டுங்கள்!

ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்

தாய்த் தமிழ்ப் பள்ளி

 தமிழ்ப்பெயர்கள் / ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்

http://www.thaithamizh.com/

ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்

 !
அகமுடைநம்பி
அகரன்
அகவன்
அகல்நெஞ்சன்
அகவழகன்
அகத்தினியன்
அகில்
அஞ்சாநெஞ்சன்
அடல் எழிலன்
அடலேறு
அடியார்க்கு நல்லான்
அடைக்கலம்
அண்ணல்
அண்ணல்தங்கோ
அண்ணலங்கோ
அணிமலர்
அண்ணாத்துரை
அதங்கோட்டாசான்
அதிகுணன்
அதியன்
அதியமான்
அதிவீரபாண்டியன்
அந்திவண்ணன்
அப்பாத்துரை
அம்பலத்தரசன்
அம்பலவாணன்
அம்மையப்பன்
அமிழ்தச்செல்வன்
அமிழ்தரசன்
அமிழ்தன்
அமிழ்திறைவன்
அமுதக்கதிர்
அமுதக்கதிரோன்
அமுதச்செல்வன்
அமுதவண்ணன்
அமுதவாணன்
அமுதன்
அரங்கவரசன்
அரங்கண்ணல்
அரசகுமரன்
அரசப்பன்
அரசர்க்கரசன்
அரசவேந்தன்
அரசன்
அரசிளங்குமரன்
அரசிளங்கோ
அரசு
அரசுமணி
அரண்
அரணமுறுவல்
அரவரசன்
அரிமா
அரிமாச்செல்வன்
அரிமாத்தமிழன்
அரிமாப்பாண்டியன்
அரியநாயகம்
அருகன்